நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவர் மற்றும் கவர்ஸ் கோப்ரேட் நிறுவனத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் 30 மில்லியன் ரூபா நிதியினை பெற்றுக்கொண்டமைக்கு எதிராகவே இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு சொந்தமான கவர்ஸ கோப்ரேட் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்களில் சட்டவிரோதமான முறையில் 30 மில்லியன் ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளதாக தெரிவித்து சுமார் 11 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சட்ட மா அதிபரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.