நாமல் ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல தற்காலிக அனுமதி..

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று(12) அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த மாதம் 24 ஆம் திகதி முதல் மே மாதம் 18 ஆம் திகதி வரை அமெரிக்கா மற்றும் நேபாலுக்கு செல்லவுள்ளதாக விளக்கமளித்து நாமல் ராஜபக்ஷவில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த பின்னர் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கிரிஸ் நிறுவனத்திடமிருந்து பெற்றுகொள்ளப்பட்ட நிதியை முறைக்ககேடாக பயன்படுத்தியதாக கூறி அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

#rishma