நாலக உள்ளிட்டோரின் விளக்கமறியல் நீடிப்பு

பிணையங்கள் மற்றும் பரிவர்தனை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் நாலக கொடஹேவா, உட்பட மூவரை எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த நபர்கள், பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவில் கடந்த 2013ஆம் ஆண்டு இடம்பெற்ற 5 மில்லியன் ரூபாய் மோசடி தொடர்பிலேயே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையிலேயே அவர்களது விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.