நாலக டி சில்வா இன்று மீண்டும் சி.ஐ.டி முன்னிலையில்…

முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா இன்று(25) மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் கீழ் அவரிடம் நான்கு தடவைகள் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இந்த நான்கு நாட்களில் 34 மணி நேரம் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.