பிரதி காவற்துறைமா அதிபர் நாலக டி சில்வா நீதிமன்ற உத்தரவுக்கமைய சற்று முன்னர் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
குரல் பதிவு மாதிரியை வழங்குவதற்காக இன்று(28) குறித்த திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன நேற்று(27) உத்தரவிட்டமையும் குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கொலை சூழ்ச்சி தொடர்பிலான தொலைபேசி உரையாடல் குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமையவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.