முன்னாள் பிரதி காவற்துறை மா அதிபர் நாலக டி சில்வா நாளையும்(25) குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகவுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் கீழ் அவரிடம் நான்கு நாட்கள், 34 மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டிருந்ததாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.