(FASTNEWS-COLOMBO) முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை எதிர்வரும் 06 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை கொலை செய்யும் சதித்த திட்டம் சம்பந்தமாக நாமல் குமாரவால் வெளியிடப்பட்ட குரல் பதிவையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த இந்திய பிரஜை விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இந்திய பிரஜை மீண்டும் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.