(FASTNEWS | COLOMBO) – வடமேல் மாகாணத்திலும், அனுராதபுரம், மன்னார், வவுனியா, கம்பஹா மாவட்டங்களிலும் நாளை(15) அதிக வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மக்கள் வெப்பநிலை குறித்து அதிக அவதானம் செலுத்த வேண்டுமென திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதனால் போதுமான அளவு நீரைப் பருகுமாறு சுகாதார அமைச்சு, பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.