நாளைய போட்டியில் சந்திமால் களமிறங்குவது சந்தேக நிலையில்…

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமாலின் சுகயீன நிலை வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இங்கிலாந்து அணிக்கு எதிராக கண்டி பல்லேகல மைதானத்தில் கடந்த 17ம் திகதி இடம்பெற்ற மூன்றாவது போட்டியின் இறுதியில் கண்ணில் எரிச்சல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் சந்திமால் போட்டிக்கு பின்னரான ஊடக சந்திப்பிலும் கலந்து கொண்டிருக்கவில்லை.