உள்நாட்டில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்கேற்ற போது உபாதைக்கு உள்ளான பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரர் ஷாகிப் அல் ஹசன் இன்று(15) இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை(16) நடைபெறவுள்ள இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஷாகிப் அல் ஹசன் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சுதந்திர கிண்ண T-20 தொடரில் சேர்க்கப்பட்டிருந்த ஷாகிப் அல் ஹசன் காயத்தின் தன்மை முழுமையாக குணமாகவில்லை என்பதால் போட்டியிலிருந்து விலகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
-Rishma