நாளை 12 மணித்தியால நீர் வெட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நாட்டில் பல பகுதிகளில் நாளை(18) 12 மணித்தியால நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இதன்படி, வெலிசறை, மாபோல, மஹபாகே, கந்தான, நாகொட, திக்கோவிட்ட, பமுனுகம மற்றும் போபிட்டிய ஆகிய பகுதிகளில் நாளை(18) காலை 9 மணி முதல் 12 மணித்தியாலம் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.