நாளை 12 மணிநேர நீர் வெட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மொரட்டுவை மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு நாளை(19) இரவு 8 மணி முதல் 12 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இருப்பினும் சொய்சாபுர அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு தொடர்ந்தும் நீர் வழங்கல் மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.