நாளை 7 மணித்தியால நீர் விநியோக தடை அமுல்படுத்த நடவடிக்கை.

திருகோணமலை மாவட்டத்தின் சில பிரதேசங்களில் நாளை 7 மணித்தியால நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

நாளை முற்பகல் 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை இந்த நீர்விநியோக தடை அமுலில் இருக்கும் என குறித்த சபை குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, திருகோணமலை நகரம், கந்தளாய், கிண்ணியா மற்றும் தம்பலகாமம் ஆகிய பிரதேசங்களில் இந்த நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

கந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திருத்தப்பணிகள் காரணமாகவே இந்த நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.