நாளை(02) 09 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை

(FASTNEWS|COLOMBO) – நாளை(02) காலை 08.30 மணி முதல் 09 மணித்தியாலங்கள் பத்தேகம நீர் சுத்திகரிப்பு நிலைய புதுபித்தல் நடவடிக்கை காரணமாக பத்தேகம, நாகொட, ஹல்பேதொட்ட, சந்தரவல, கனேகம, மஹகொட, மீமெடும, கோனாபீனுவல, களுபே, தெல்வத்தை மற்றும் ஹிக்கடுவை நகருக்கு நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.