நா.உறுப்பினர்களின் ஊதியத்தினை அதிகரிப்பதற்கான யோசனை இன்று(29) அமைச்சரவையில் முன்வைப்பு..

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தினை ஒரு லட்சம் ரூபாவாக அதிகரிப்பதற்கான யோசனை இன்று(29) அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சினால் குறித்த இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் இது குறித்த தீர்மானம் அண்மையில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்படி நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களுக்கும், கட்சி வேறுபாடு இன்றி ஊதியம் அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்காக வழங்கப்படுகின்ற 500 ரூபாய் கொடுப்பனவும், 2,500 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.