நிட்டம்புவ, மல்வத்த சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
பஸ் ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் மோதிக் கொண்டதில் இந்தக் கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
நிட்டம்புவ மல்வத்தை சந்தியில் இன்று காலை இக்குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அலுவலக ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றும், முச்சக்கர வண்டி ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
(riz)