நிதி ஒதுகீடுகளுக்கு திறைசேரி செயலாளருக்கு அதிகாரம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேர்தல் செலவுகள் உள்ளிட்ட எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு அரசாங்க செலவுகளை ஈடுசெய்யும் வகையில், நிதி ஒதுகீடுகளை செய்வதற்கு திறைசேரி செயலாளருக்கு  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு உள்ள நிறைவேற்று அதிகாரத்தின் அடிப்படையில், அரசியலமைப்புக்கு அமைவாக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.