நிதி நகர வேலைத்திட்டத்தின் மூலம் மீனவ சமூகத்திற்கு பாதிப்புக்கள் ஏற்படப்போவதில்லை என்று மீன்பிடி மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அந்த வேலைத் திட்டத்திற்கான மண் பெற்றுக் கொள்வதன் காரணமாக மீனவர்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களுக்காக நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் அமைச்சர் இவ்வாறு கூறினார்.