பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்..

நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர இன்று பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் அமைச்சரவையின் அனுமதி பெறப்படாமல் “லக் சதோச”வுக்கு இந்தியாவிலிருந்து ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி கொண்டுவர ஐந்து பில்லியன் ரூபாய் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவே அவர் இவ்வாறு இன்று அழைக்கப்பட்டுள்ளார்.