நியூசிலாந்து க்றிஸ்சேர்ச் பள்ளிவாயல் தாக்குதல் – நாமல் ராஜபக்ஷ அனுதாபம்…

(FASTNEWS | COLOMBO)- நியூசிலாந்து க்றிஸ்சேர்ச் பள்ளிவாயலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதலிலை வன்மையாக கண்டிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் வலைதளத்தில் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில்; க்றிஸ்சேர்ச்சில் நடந்த தாக்குதல் பற்றி கேட்டவுடன் அதிர்ச்சியடைந்தேன். ஒருவனது பயங்கரவாத செயற்பாட்டினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள், குடும்பத்தினர்கள், நண்பர்கள் அனைவரதும் நிலை தொடர்பில் கவலை கொள்கிறேன். வெறுப்பு மற்றும் வன்முறை ஒருபோதும் வெற்றி பெறாது. எங்கள் பிராத்தனைகள் நியூசிலாந்தில் உள்ள உங்களுக்கு இருக்கும்..” என தெரிவித்துள்ளார்.