நியூசிலாந்து தாக்குததாரியின் தாயிடமிருந்து வேண்டுகோள்: தாக்குதலுக்கு இன்றுடன் ஒரு வாரம்… (PHOTOS, VIDEO)

(FASTNEWS | COLOMBO) – நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள பிரதான 02 பள்ளிகளில் கடந்த வெள்ளிக்கிழமை(15) தொழுகை நடைபெற்றபோது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதில், 50 பேர் பலியாகி இன்றுடன்(22) ஒரு வாரம் நிறைவு பெறுகிறது.

அதனை நினைவு கூறும் விதமாக இன்றைய தொழுகையில் அநேகமான மக்கள் இன மத பேதமின்றி வருகை தந்திருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஆறாத வடுக்களாக முழு உலகிலும் குறித்த தாக்குதல் மனதில் ஆழமாக பதிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Image result for new zealand ATTACK

Image result for new zealand ATTACK

இந்நிலையில் குறித்த சந்தேக நபரின் தாயார் அந்நாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில், ஊடகவியலாளர் குறித்த தாக்குதலில் நேரலையினை காண்பிக்க.. “என்னால் தொடர்ந்தும் அதனை பார்வையிட முடியாது அதனை நிறுத்துமாறு கோருகிறார். பின்னர் தன்னை கட்டுப்படுத்த முடியாதவாறு கண்ணீர்விட்ட குறித்த தாய் எனது மகனுக்கு தகுந்த தண்டனை மரண தண்டனையே என தெரிவித்துள்ளார்.