நியூஸிலாந்து நாட்டின் பிரதமர் ஜோன் கீ இலங்கை வருகை

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நியூஸிலாந்து நாட்டின் பிரதமர் ஜோன் கீ நேற்று இரவு இலங்கையை வந்தடைந்தார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த அவரை இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினர் வரவேற்றனர்.

எதிர்வரும் 26ஆம் திகதிவரை நாட்டில் தங்கியிருக்கும் அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட உயர்மட்ட அரசியல் பிரமுகர்களுடன் சந்திப்பில் ஈடுபடவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.