நிலவும் சீரற்ற காலநிலையால் பாடசாலைகளுக்கு விடுமுறை…

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் சில பாடசாலைகளுக்கு இன்று(08) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி இரத்தினபுரி, எலபாத்தை, எஹலியகொட, குருவிட்ட மற்றும் அயகம கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

 

(rizmira)