இலங்கையிலுள்ள சில குழுக்கள் கடந்த காலத்தில் எவ்வித பாடங்களையும் கற்றுக் கொள்ளவில்லை என இலங்கை கிரிக்கெட் அணி வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் அமைதியின்மை குறித்து தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் இதுகுறித்து பதிவொன்றினை பதிவு செய்துள்ளார்.
இலங்கையினுள், மீண்டும் ஒரு இனவாதம் தேவையா என கேள்வி எழுப்பியுள்ள மேத்யூஸ், இவற்றினை வன்மையாக கண்டிக்கின்றதாகவும் இலங்கை ஒரே தேசமாக கட்டியெழுப்ப அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அனைவரும் இனவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.



#rishma