கொழும்பினை அண்மித்த மற்றும்நி பல பிரதேசங்களில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால் பல பகுதிகளில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாமன்கடை, துட்டுகெமுனு மாவத்தையில் வாகனம் ஒன்றின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஹோமாகம – கொடகம வீதியின் கொடகம சந்தியில் முச்சக்கரவண்டி ஒன்றின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.
#rishma