இலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக, இந்தியாவிலிருந்து இரண்டு கப்பல்கள் மற்றும் விமானம் ஒன்றின் மூலம், நிவாரணப் பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
நிவாரணப் பொருட்கள் அடங்கிய ஐ.என்.எஸ் சுட்லெஜ் மற்றும் ஐ.என்.எஸ் சுனைய்னா ஆகிய இரு கப்பல்களும் தற்போது, இலங்கையை வந்தடைந்துள்ள நிலையில், இந்திய விமானப்படையைச் சேர்ந்த சி – 17 என்ற விமானம், இன்று மாலை, இலங்கை வந்தடையும் என்று, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானி காரியாலயம் மேலும் தெரிவித்துள்ளது.