நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து பாகிஸ்தான்  பிரதமர் நவாஸ் ஷெரீஃப்  இராஜினாமா

பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் நவாஸ் ஷெரீபின் உறவினர்கள் ஈடுபட்டு  ஆதாயம் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கொன்று பாகிஸ்தான்   உச்ச நீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையின் முடிவில் இன்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பை குற்றவாளியாக கண்டு அவர் பாராளுமன்றத்தில் உறுப்பினர் பதவி வகிப்பதற்கு தகுதி அற்றவர் எனவும் அதனால் பிரதமர் பதவியிலிருந்து அவரை தகுதி நீக்கம் செய்வதாகவும் அறிவித்தது.
அதை தொடர்ந்து பாகிஸ்தான் வெளிநாட்டு அமைச்சரின் ஆலோனைக்கமைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தனது பதவியிளுருந்து இன்று இராஜினாமா செய்துள்ளார்.