(FASTNEWS | COLOMBO) – மஹபொல நிதித் திட்டத்தின் கீழ் இடம்பெற்ற இலங்கையின் பிரதான தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான மாலபே ஸ்ரீலங்கா தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தினை தனியார் மயப்படுத்தல் தொடர்பிலான வாக்கு மூலம் ஒன்றுக்காக, நீதியரசர் ஜயந்த ஜயசூரியவை நாளை(12) கோப் குழுவிற்கு அழைக்க குறித்த குழு தீர்மானித்துள்ளது.
நீதியரசரை குறித்த குழுவுக்கு அழைப்பது நீதியரசராக அல்ல என்றும், மஹபொல நிதியின் தலைவராக என கோப் செயற்குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.