நீரினை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை…

நீரினை விரயம் செய்யாது, சிக்கனமாகப் பயன்படுத்துமாறு ​தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை மீளவும் பொது மக்களிடம் கோரியுள்ளது.

இது தொடர்பில் குறித்த வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ. அன்சார் தெரிவிக்கையில், நிலவி வரும் அதிக வெப்பம் மற்றும் வரட்சியின் காரணமாக, இந்நாட்களில் நீரின் தேவை அதிகமாகவுள்ளது. சில பிரதேசங்களுக்கு நீரினை தொடர்ச்சியாக வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக நீரினை சிக்கனமாக பய்னபடுத்துமாரும் அவர் தெரிவித்திருந்தார்.