நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு ஊழியர்கள், 25% சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட மேலும் 03 கோரிக்கைகளை முன்வைத்து இன்று(01) காலை 9 மணி தொடக்கம் 4 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
அதேபோல் , தமது உறுப்பினர்கள் மேலதிக நேரம் மற்றும் வார இறுதி பராமரிப்பு செயற்பாடுகளில் இருந்து விலகியிருப்பதாகவும், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு ஊழியர்கள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் உபாலி ரத்னாயக்க மேலும் தெரிவித்திருந்தார்.