தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபையின் ஊழியர்கள் இன்றும்(31) அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.
காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை 4 மணி நேரம், குறித்த இந்தப் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகள் தொடர்பில் அதிகாரிகள் உரிய முறையில் பதிலளிக்காமையினால் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக நீர் வழங்கல் தொழிற்சங்கத்தின் கூட்டு முன்னணியின் பொறியியலாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.