நுவரெலியா மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களை அதிகரிப்பது குறித்த யோசனை அமைச்சரவையில்..

நுவரெலியா மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்களை ஐந்தில் இருந்து 12ஆக அதிகரிப்பது குறித்த யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.

இதுதொடர்பில் சலக கட்சிகளினதும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று(23) இரவு உள்ளூராட்சி மன்றங்களுக்கான அமைச்சர் பைசர் முஸ்தபாவுடன் கலந்துரையாடி இருந்தனர்.

இதன்போது அமைச்சர் பைசர் முஸ்தபா இந்த உறுதிமொழியை தங்களுக்கு வழங்கியதாக, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்

 

(rizmira)