நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையை அரச உடைமையாக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக, அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்கு, சைட்டம் நிறுவனம் மற்றும் அரச வங்கியின் ஊடாக பெற்றுக் கொள்ளப்பட்ட கடன் தொகையை 10 வருடங்களுக்குள் செலுத்திய பின்னர், குறித்த அந்த வைத்தியசாலையை முழுமையான அரச உடமையாக்குவதறகு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பில், உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகியோர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாகவும் அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.