நெவில் பெர்னாண்டோ தனியார் போதனா வைத்தியசாலை குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாக முன்னிலை சோசலிச கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை அரசுடமையாக்கப்பட்டுள்ளது என செய்யப்படும் பிரச்சாரங்களில் எவ்வித உண்மையும் இல்லை என கட்சியின் கல்விப் பிரிவு செயலாளர் புபுது ஜாகொட நேற்று(17) தெரிவித்துள்ளார்.
குறித்த இந்த வைத்தியசாலை பத்து ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். நிறுவனம் ஒன்றை குத்தகைக்கு எடுப்பதற்கும், அதனை அரசுடமையாக்குவதற்கும் பாரிய வேறு பாடுகள் உண்டு என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.