முன்னாள் ஜனாதிபதியின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சிக்கு எதிராக 2010 முதல் 2014ம் ஆண்டு வரை சொத்துக்களை வெளியிடப்படாத நிலையில் ஊழல் சரத்தின் அடிப்படையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் ஐந்தினதும் விசாரணையினை முன்னெடுக்க கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல உத்தரவிட்டுள்ளார்.
மேற்படி, குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்க தினம் குறிக்கப்பட்டுள்ளது.