நேற்று 650 பேருக்கு கொரோனா தொற்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 35,387 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் 650 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கொரோனா தொற்றுக்குள்ளானோரில் 8,874 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 26,353 ஆக அதிகரித்துள்ளதுடன், இதுவரை 160 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.