நேற்றைய தினம் மாத்திரம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள்…

(FASTNEWS|COLOMBO) சீகிரியாவை பார்வையிட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், நேற்றைய தினம் மாத்திரம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வருகைத் தந்ததாக வீடு, நிர்மானம் மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 18ம் திகதி முதல் இன்று வரை சீகிரியாவை பார்வையிடுவதற்காக கட்டணம் அறவிடப்படாமையே இதற்கு பிரதான காரணமாகும் என அந்த அமைச்சின் செயலாளர் பர்னாட் வசந்த தெரிவித்துள்ளார்.