நேவி சம்பத் உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

(FASTNEWS| COLOMBO) – கொழும்பு உட்பட சில பிரதேசங்களில் இருந்து 11 இளைஞர்களை கடத்திச் சென்று காணாமல் போக செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள கடற்படையின் முன்னாள் அதிகாரியான ‘நேவி சம்பத்’ என்ற லெப்டினட் கமாண்டார் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி உட்பட சந்தேக நபர்களை எதிர்வரும் 27ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க இன்று(21) உத்தரவிட்டுள்ளார்.