நைஜீரியாவில் ஆளுநர் சென்ற வாகனம் மீது துப்பாக்கிச் சூடு – நால்வர் உயிரிழப்பு

(FASTNEWS|COLOMBO) – நைஜீரியாவில் துணை ஆளுநர் சென்ற வாகன அணிவகுப்பின் மீது மர்மநபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 3 பொலிசார் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று நைஜீரியாவின் அபுஜாவில் நடைபெற இருந்த அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக நைஜீரியாவின் நசராவா மாகாணத்தின் துணை ஆளுநர் இம்மானுவேல் புறப்பட்டுச் சென்ற வேளையில்,
திடீரென வழியில் மர்ம நபர் ஒருவர், ஆளுநரின் வாகன அணிவகுப்பை குறிவைத்து துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளார்.

தாக்குதல் நடத்திய மர்ம நபர் யார் என இன்னும் தெரியவில்லை

சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகலை மேற்கொண்டு வருகின்றனர்.