பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் T-20 எதிர்வரும் 15ம் திகதி…

இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய இரு அணிகளுக்கிடையிலா முதலாவது T-20 கிரிக்கெட் போட்டி டாக்கா நகரில் எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியிருந்தது.

இந்த உற்சாகத்துடன் T-20 தொடரையும் இலங்கை அணி கைப்பற்றும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை T-20 அணிக்கு திஸர பெரேரா, ஜீவன் மென்டிஸ் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

#rishma