பங்களாதேஷ் அணியுடனான போட்டியின் பின்னர் லசித் மாலிங்க ஓய்வு

(FASTNEWS | COLOMBO) – இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க எதிர்வரும் 26 ஆம் திகதி பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறவுள்ள சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியதன் பின்னர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

மூன்று ஒருநாள் போட்டிகளை கொண்ட பங்களாதேஷ் அணியுடனான முதலாவது போட்டியில் விளையாடியதன் பின்னரே மாலிங்க ஓய்வு பெறவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.