நுண் கடனுதவி நிதியங்கள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எவ்வித அறிவும் இருக்கவில்லை என்பதால், சமூர்த்தி உட்பட நுண் கடன் நிதியங்கள் மிகவும் சிறப்பாக வளர்ச்சியடைந்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு பொரல்லை மருத்துவ பரிசோதனை ஆய்வு நிறுவனத்தின் அண்மையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு இந்த கடன் நிதியங்கள் பற்றி எந்தவித அறிவோ நுட்பங்களோ இருக்கவில்லை. அதனாலேயே குறித்த பகுதிகள் மயிரிழையில் தப்பியது.
இன்னும், அது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அக்கறையும் அவருக்கு பெரிதாக இருக்கவில்லை என்பதால், குறித்த இந்த நிதியங்கள் சிறந்த முறையில் வளர்ச்சியடைந்துள்ளன எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டி கூறியுள்ளார்.