திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தில் ரூ.3 ஆயிரத்து 90 மில்லியன் நிதி மோசடி தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட நான்கு பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு அடுத்த வருடம் மார்ச் மாதம் 5 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதி என்.வீ.கருணாதிலக்க முன்னிலையில் இன்று(19) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொண்ட போது, அவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னரே குறித்த இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.