நேற்றைய தினம் பசில் ராஜபக்ஷவை , கடுவெல நீதிமன்றிற்கு பொலிசார் கொண்டுசென்றார்கள்.
அவர் அம்பூலன்சில் படுத்தபடியே நீதிமன்றம் சென்றார். தன்னால் எழுந்து நீதிமன்றம் வரை நடக்க முடியாது என்று பசில் தெரிவித்துவிட்டார்.
இதனால் கடுவெல நீதிமன்ற நீதவான், வெளியே வந்து அம்பூலன்சில் ஏறி பசிலை பார்வையிட்டார்.
பின்னர் அவர் இறங்கிச் சென்றுவிட்டார்.
உளே சென்ற நீதிபதி அவரை தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தடுப்புக் காவலில் இருந்தால் பசிலின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்று மகிந்த தரப்பு வக்கீல் எவ்வளவோ வாதாடிப் பார்த்தார்.
ஆனால் அதனை நீதவான் ஏற்றுக்கொள்ளவில்லை