பசில் ராஜபக்ஷவின் மைத்துனர் FCID ஆல் கைது

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் மைத்துனர் ஒருவரை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

மாத்தறை பிரதேசத்தில் காணி ஒன்றை கொள்வனவு செய்ய கோடிக்கணக்கில் எப்படி பணம் கிடைத்தது என்பதை வெளியிட தவறிய குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பசில ராஜபக்சவின் மைத்துனரான திஸ்ஸ கலப்பத்தி என்ற இந்த நபர் கனடாவில் மருத்துவராக பணியாற்றி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.