பசில் ராஜபக்ஷ சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதி

நேற்று கைது செய்யப்பட்ட பசில் ராஜபக்ச திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் தேசிய வைத்தியசாலையிலேயே இன்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், முதுகு வலி காரணமாகவே இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திவிநெகும திணைக்களத்தின் நிதியில், பிளாஸ்டிக் குழாய்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.