பட்டினியை தவிர்ப்பதற்காக சிறிதளவு உணவை திருடுவது குற்றமாகாது – இத்தாலிய மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

பட்­டி­னி­யி­லி­ருந்து விடு­ப­டு­வ­தற்­காக சிறிய அளவு உணவை திரு­டு­வது ஒரு குற்­ற­மல்ல என  இத்­தா­லிய மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

ரொமான் ஒஸ்ட்­ரி­யாகோவ் என்­பவர் சுப்பர் மார்க்கெட் ஒன்­றி­லி­ருந்து சீஸ் மற்றும் சொசேஜ்­களை திரு­டி­ய­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருந்தார்.

இப்­ பொ­ருட்­களின் பெறு­மதி 4.07 யூரோ (சுமார் 670 ரூபா) எனத் தெரி­விக்­கப்­பட்­ட­டி­ருந்­தது. யுக்ரைன் வம்­சா­வ­ளியைச் சேர்ந்த ஒஸ்ட்­ரி­யாகோவ் இத்­தா­லியில் வீடற்ற நிலையில் யாச­க­ராக வாழ்ந்து வந்­தவர். அவர் 2011 ஆம் ஆண்டு சுப்பர் மார்க்­கெட்டில் பாணுக்கு மாத்­திரம் பணம் செலுத்­தி­விட்டு சீஸ், சொசேஜ்­களை தனது பொக்­கெட்­டிற்குள் ஒளித்­து­வைத்­தி­ருப்­பது குறித்து மற்­றொரு வாடிக்­கை­யாளர் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

அதன்பின்  ஒஸ்ட்­ரி­யாகோவ் மீது திருட்டுக் குற்றம் சுமத்­தப்­பட்டு வழக்குத் தொடுக்­கப்­பட்­டது. இவ்­ வ­ழக்கை விசா­ரித்த நீதி­மன்றம் 2011 ஆம் ஆண்டு ஒஸ்­ரி­யா­கோ­வுக்கு 7 மாத சிறைத்­தண்­ட­னையும் 100 யூரோ (சுமார்  17000 ரூபா) அப­ரா­த­மும் விதித்­தி­ருந்­தது.

இத் ­தீர்ப்­புக்கு எதி­ராக இத்­தா­லிய மேன் முறை­யீட்டு நீதி­மன்­றத்தில் மேன் முறை­யீடு செய்­யப்­பட்­டது. இவ்­வ­ழக்கில் பட்­டி­னியை போக்­கு­வ­தற்­காக சிறிய அளவு உணவை திரு­டு­வது குற்­ற­மா­காது எனக் கூறிய நீதி­ப­திகள், ரொமான் ஒஸ்ட்­ரி­யா­கோவை விடு­தலை செய்­துள்­ளனர். கடந்த திங்­கட்­கிழமை இத்­தீர்ப்பு அளிக்­கப்­பட்­டுள்­ளது.

இத்­தா­லிய உயர் நீதி­மன்­ற­மானது சட்ட விட­யங்கள் தொடர்பான மனுக்களையே பொதுவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் என்பதால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இத் தீர்ப்பு இறுதியானது எனத் தெரிவிக்கப்படுகிறது.