பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது கவலையான விடயம் – ஜனாதிபதி..

மாலபே, சைட்டம் பிரச்சினையை தீர்ப்பதற்கு கொள்கை ரீதியான பல தீர்மானங்களை கொண்டு வந்துள்ள நிலையில், அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்பட்டு சில தரப்பினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது கவலையான விடயம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இன்று(05) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

(rizmira)