பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று 4வது நாளாகவும் தொடர்கிறது…

பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் ஆரம்பிக்கப்பட்ட தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று(03) 4வது நாளாகவும் தொடர்கிறது.

இப் பணிப்புறக்கணிப்பு காரணமாக பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பரீட்சைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர மற்றும் பேராதெனிய உள்ளிட்ட பல பல்கலைக்கழங்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் கடந்த புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.