பண மோசடி – நான்கு வெளிநாட்டவர்கள் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பண மோசடி செய்த 4 வெளிநாட்டவர்கள் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கல்கிஸ்ஸை பகுதியில் வைத்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நைஜீரியா பிரஜைகள் மூவர் மற்றும் உகண்டா நாட்டு பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.